கிரிக்கெட் வீரர் அசாருதீன் மீதான தடை குறித்து விவாதிக்க கிரிக்கெட்
கட்டுப்பாட்டு வாரியத்தின் செயற்குழு மும்பையில் இன்று கூடுகிறது.
அசாருதீன் மீது எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இந்தக்
கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது. ஆனால், இது வழக்கமான
கூட்டம்தான் என கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரத்னாகர்
ஷெட்டி தெரிவித்துள்ளார்.
12 ஆண்டுகளுக்கு முன், கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக எழுந்த
குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் கேப்டன் அசாருதீன் மீது கிரிக்கெட்
வாரியம் ஆயுட்காலத் தடை விதித்தது. இந்த தடையை நீக்கி ஆந்திரா
உயர்நீதிமன்றம் கடந்த 8-ம் தேதி உத்தரவிட்டது.
மேலும், அசாருதீன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் எதுவும் இல்லை
என்றும் நீதிமன்றம் கூறியிருந்தது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து
கிரிக்கெட் வாரியக் கூட்டத்தில் இன்று ஆலோசிக்கப்படுகிறது.
-சத்திஷ் K. K.K.nagar