இந்தியா – இங்கிலாந்து 2-வது டெஸ்ட் நாளை துவக்கம்

      இந்தியா- இங்கிலந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நாளை துவங்குகிறது. அஹமாதபாத்-தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நம்பிக்கையுடன் களமிறங்குகிறது இந்திய அணி.
முதல் போட்டியில் சுழற்பந்து வீச்சுக்கு மைதானம் ஒத்துழைக்கவில்லை என்று கேப்டன் டோனி கூறியுள்ளதால், மும்பை மைதான பிட்ச் அதற்கேற்ப அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  காயம் காரணமாக உமேஷ் யாதவ் அணியில் இடம்பெற மாட்டார் என்று தெரிகிறது. 3-வது சுழற்பந்து வீச்சாளராக ஹர்பஜன் சிங் களமிறங்க வாய்ப்புள்ளது.
கடந்த போட்டியில் சதம் விளாசிய அதிரடி வீரர் சேவாக்-க்கு, இது 100 டெஸ்ட் போட்டி என்பதால், அவரின் அதிரடி தொடரும் என எதிர்பார்க்கலாம். இங்கிலந்து அணியிலும் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டிவன் ஃபின் களமிறங்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வணியிலும் சுழற்பந்து வீச்சாளர் பனேசர் கூடுதலாக இடம்பெறுவார் என தெரிகிறது.
-விஸ்வநாதன்