பாகிஸ்தான் வீரர்கள் இந்தியா வருகை சிவசேனா போராட்டம் அறிவிப்பு


  ந்திய அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் அணி, இன்று பெங்களூரு வருகிறது. இந்தியா வரும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என சிவசேனா அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. அதற்காக பாகிஸ்தான் வீரர்கள் பிற்பகல் 2.15 மணிக்கு லாகூரில் இருந்து புறப்பட்டு டெல்லி வருகின்றனர். பின்னர் அங்கிருந்து மாலையில் பெங்களூருவுக்கு வரவுள்ளதாக கர்நாடக கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
இரு அணிகள் இடையிலான முதல் 20 ஓவர் போட்டி பெங்களூரூவில் வரும் 25-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையே 5 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது முதன் முறையாக கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. மும்பை தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இரு அணிகள் இடையே கிரிக்கெட் தொடர் நடத்தப்படவில்லை.
இதனிடையே இந்தியாவில், பாகிஸ்தான் அணி விளையாடும் இடங்களில் போராட்டம் நடத்தப்படும் என சிவசேனா கட்சி அறிவித்துள்ளது.
தீவிரவாத நடவடிக்கைகளை அந்த நாடு கைவிடாததால் கண்டனப் போராட்டம் நடத்தப்போவதாக, சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் மனோகர் ஜோஷி தெரிவித்துள்ளார்.