இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி
மழையால் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால் ரசிகர்கள் கவலையில்
ஆழ்த்துள்ளனர்.
தொடர் மழை காரணமாக இரு அணி வீரர்களும், இன்று மாலை பயிற்சியில்
ஈடுபடவில்லை. இந்நிலையில் தொடர்ந்து மழை பெய்யும் என சென்னை வானிலை மையம்
தெரிவித்துள்ளதால், நாளைய போட்டியின் நிலை குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.
இவ்விரு அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட்
தொடர் நடைபெறுகிறது.
இதன் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை காலை 9 மணிக்கு
தொடங்குகிறது. இதில் விளையாடுவதற்காக சென்னை விமான நிலையம் வந்தடைந்த,
தோனி தலைமையிலான இந்திய அணியினர் மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் பலத்த
பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டனர்.